search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஜா வளர்ப்பு"

    டெல்லியில் பெண் ஒருவர், தனது முயற்சியில் ஒரு தொட்டியில் அதிக ரோஜாக்களை வளர்ப்பதில் லிம்கா சாதனை படைத்துள்ளார். #DelhiRosewoman #LimcaBookOfRecords
    புதுடெல்லி:

    மேற்கு டெல்லியில் வசந்த காலம் முன்னதாகவே துவங்கியுள்ளது. இதையடுத்து குதுப் விகார் பகுதியை சேர்ந்த மீனா உபத்யாய் என்ற பெண், ரோஜாப் செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.    

    பொதுவாக ரோஜாக்களை வளர்க்க ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன், பரந்த நிலப்பரப்பும் தனிப்பட்ட பராமரிப்பும் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ரோஜாவின் வளர்ச்சியும், அதனை பராமரிக்கும் விதம் கொண்டு வேறுபடும். எனவே இதனை பரவலாக அனைத்து இடங்களிளும் தொடர்ந்து வளர்ப்பது கடினமான ஒன்றாகும். ஆனால் ஒரே தொட்டியில் ஏராளமான ரோக்களை வளர்த்து சாதனை படைத்துள்ளார் மீனா.



    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 122 ரோஜாக்களை 14 இஞ்ச் மட்டுமே கொண்ட சிமெண்ட் தொட்டிக்குள் வளர்த்து, பராமரித்து வந்துள்ளார். அவரது இந்த சாதனை, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

    இது குறித்து மீனா கூறுகையில், ‘சிறிய சிமெண்ட் தொட்டிக்குள் ரோஜாக்களை பராமரிப்பது எளிதான விஷயம் அல்ல. சில ரோஜா பராமரிப்பு அமைப்புகளை சந்தித்து ஆலோசனை கேட்டறிந்தேன். இதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டேன். பொழுதுபோக்கிற்காக செய்ய ஆரம்பித்தது, நாளடைவில் அதுவே முக்கிய நோக்கமாக மாறியது. தினமும் 2 மணி நேரம் தொடர்ச்சியாக ஒதுக்க வேண்டும். தற்போது இந்த சாதனை மகிழ்ச்சி அளிக்கிறது’ என கூறியுள்ளார்.

    ×